search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் மோதி தொழிலாளி பலி"

    • அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • உடன் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள திம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா(45).கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் புட்டப்பா (41), நரசிம்மப்பா (44) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-தளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே வெங்கட்ராமப்பா துடிதுடித்து உயிரிழந்தார்.

    புட்டப்பாவும், நரசிம்மப்பாவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மதனகோபாலபுரம் ஆர்.சி.காலனியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி சென்று மளிகைப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் ஜெபராஜ் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் ஜெபராஜீக்கு மனைவியும், 2 பெண்கள் குழந்தைகள் மற்றும் 1 மகனும் உள்ளனர்.

    ×